காலத்தை வென்று நிற்கும் தமிழ்வாணன் படைப்புகளில், நான்கு நாவல்களை தாங்கி நிற்கிறது இந்த நுால்.
முதலில் ‘கண்ணம்மா’ கதையில் தகப்பனை இழந்து, தாயின் அரவணைப்பில் வளர்ந்து காதல் வயப்பட்ட செல்லப் பெண்ணின் வாழ்க்கையை சுற்றிச் சுழல்கிறது.
திருப்பங்கள் நிறைந்த ‘நிழல் மனிதன்’ நாவலில், அனுமானிக்கவே முடியாத அதிர்ச்சிகள் நிறைந்துள்ளன. புதுமை புகுத்தப் பட்டுள்ளது.
மர்ம முடிச்சுகளுடன் பிணைந்துள்ள ‘பின்னிரவு’ நாவல் ஆர்வத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்துகிறது. மறைக்கப்பட்ட நிகழ்ச்சிகளை வெளிக்கொணர்ந்து மங்கலமாக முடிகிறது. நான்காவதாக, ‘கவிழ்ந்த கப்பல்’ என்ற நாவல், உண்மை காதலர்களுக்கு என்ன நடக்கும் என்பதை பற்றி கூறுகிறது.
– டாக்டர் கார்முகிலோன்