மந்திரங்களின் மகிமையையும், தியானம், ஜபங்களின் சிறப்புகளையும் எடுத்துக் கூறி தெளிவு தரும் நுால்.
மந்திரங்களின் சக்தியை அளவிட முடியாது.
அது வழங்கும் பயன் எல்லையற்றது. அவை பயன்படும் விதம் மிக விரிவாக தரப்பட்டு உள்ளன. ஞானயோகம், பக்தியோகம், கர்மயோகம் இருந்தாலும், ராஜயோகத்தில் தான் தியான முறை உள்ளதாக உரைக்கிறது.
இசையால் இறையருள் பெறலாம். வாழ்வில் வளமும் நலமும் தந்து உதவும் தியான மந்திரங்கள் பற்றி விரிவான தகவல்களை உடைய நுால்.