இலக்கியம், இலக்கணம், மொழியியல், மொழி கொள்கை கருத்துகளை உள்ளடக்கிய கட்டுரைகளின் தொகுப்பு நுால்.
திருக்குறளின் தனித்தன்மை, காப்பியங்களில் திருக்குறள் மேற்கோள்கள், திருக்குறள் மீதான சமயவாதிகள் கண்ணோட்டத்தை தெளிவுபடுத்துகிறது. திருக்குறளின் கட்டமைப்பு, மொழி நடை, கருத்து வெளிப்பாடு, வாழ்வியல் பயன்பாட்டை அலசுகிறது.
சங்க காலத்தில் நிலவிய மொழி நோக்கு, சொல்லாட்சி முறை, பெயர்ச்சொல், வினாச்சொல், திசைப்பெயர், வேற்றுமை உருபுகளில் ஏற்பட்ட மாற்றங்களை தகுந்த உதாரணங்களோடு சுட்டிக் காட்டுகிறது. தமிழுக்கு உலக மொழிகளோடு உள்ள தொடர்பையும் கோடிட்டுக் காட்டுகிறது. மொழிபெயர்ப்பு திறன் பற்றிய கருத்துகளையும் உடைய நுால்.
– கவிஞர் மெய்ஞானி பிரபாகரபாபு