வெற்றிக்கான நெறிமுறை, செயல்முறையை விளக்கும் நுால்.
ஆத்மஞானம் பூர்ண சித்தி பெற, இடைவிடாத பயிற்சி வேண்டும் என்கிறது. ஆத்மாவை அறிவதற்கு முதலில் தன்னையறிய வேண்டும் என சுட்டிக்காட்டுகிறது. ஐம்புலன்களை அடக்குவதுடன் பேதம், வஞ்சனை, பொய், களவு, சூது, சினம் தவிர்க்க அறிவுரைக்கிறது.
ஆத்ம விசாரணையை, சட்டைமுனி பாடல் வாயிலாக தெளிவுபடுத்துகிறது. முக்திநாத்தில் கிடைத்த அனுபவம் விளக்கப்பட்டுள்ளது. கார்த்திகை தீபம், திருவண்ணாமலை சிறப்பும் எடுத்துரைக்கப்பட்டுள்ளது. அருமையான ஆன்மிக நுால்.
– முனைவர் கலியன் சம்பத்து