விஞ்ஞான அடிப்படையில் புனையப்பட்டுள்ள கதை நுால்.
முன்பு நடந்ததை எழுதினால் சரித்திரம். பின்னால் நடக்கப் போவது விஞ்ஞானக் கதை. இந்த புத்தகம், 100 ஆண்டுகளுக்குப் பின் என்ன நடக்கும் என்பதை சித்தரிக்கிறது. ‘செவ்வாய் கிரகத்தில் மனிதன் வாழ முடியுமா’ என்ற கற்பனை செய்யப்பட்டுள்ளது. நுாறு ஆண்டுகளுக்குப் பின் மனிதனிடம் போட்டியும், பொறாமையும் வளர்ந்து இருக்கும் என கணிக்கிறது.
முன் கோபம் எதையும் யோசிக்க விடாது என்ற சொல் எந்த காலத்துக்கும் பொருந்துவதாக அமைந்துள்ளது. பெண்ணை அடைய விஞ்ஞானிகள் சண்டையிடுவதான சித்தரிப்பும் சுவாரசியம் தருகிறது. இயந்திர மனிதச் செயல்பாடு வியக்க வைத்தாலும், இறப்பு கண்ணீர் சிந்த வைக்கிறது.
– சீத்தலைச் சாத்தன்