புத்தக வாசிப்பில் கிடைத்த தகவல்களையும், மனிதர்களிடம் பழகி கற்றுக் கொண்டதில் கடைப் பிடிக்க தகுந்த விஷயங்களையும், மனங்கவர்ந்த சிந்தனைகளையும் தொகுத்து கூறும் நுால். எளிய நடையில் அனுபவ திரட்சியாக மலர்ந்துள்ளது.
வாழ்க்கையில் பிரமிப்புடன் பார்த்தவற்றை அறிமுகம் செய்கிறது. கவர்ந்த தலைவர்களிடம் கண்ட குணங்களை அலசி தெளிவுபடுத்துகிறது. எதிர்பார்த்து ஏமாந்தவற்றை பட்டியலிட்டு காட்டுகிறது. தென்னை, பனை மரங்களிலும், பல்லி, பாம்பு வகைகளிலும் கண்ட ஒற்றுமை, வேற்றுமைகளை அறிய தருகிறது.
முதுமையை வரவேற்க தயாராக வேண்டும் என்பதை தெளிவான சிந்தனையுடன் புகட்டுகிறது. காலம் எப்போது, யாரை எங்கு வைக்கும் என்ற தேடல் தரும் உள்ள நுால்.
– மதி