முகப்பு » கதைகள் » செம்மை மறந்தாரடி

செம்மை மறந்தாரடி கிளியே...!

விலைரூ.200

ஆசிரியர் : தனலெட்சுமி பாஸ்கரன்

வெளியீடு: சிறகு பதிப்பகம்

பகுதி: கதைகள்

ISBN எண்: -

Rating

பிடித்தவை
எளிய மனிதர்களை கதை மாந்தர்களாக வைத்து படைக்கப்பட்டுள்ள சிறுகதைகளின் தொகுப்பு நுால்.

வாழ்வில் அன்றாடம் கடந்து செல்லும் மாந்தர்களே கதாபாத்திரங்களாக உலவுகின்றன. வீடும், வீடு சார்ந்த மனிதர்கள் வெளிப்படுத்தும் உணர்வுகள், பலவீனங்கள், நிறை குறைகள், எதிர்பார்ப்புகள் என உண்மைக்கு நெருக்கமாக வெளிப்படுகிறது. அது கதையோடு ஒன்றச் செய்கிறது.

தொகுப்பில் 13 சிறுகதைகள் இடம் பெற்றிருக்கின்றன. முடிவுகள் எப்படி இருக்கும் என யோசிக்க முடியாத அளவு திருப்பங்களும், பரவசங்களும் நிரம்பியிருக்கின்றன. பெண்கள் உள்ளும் புறமும் சந்திக்கும் சிக்கல்களையும், உரிய தீர்வையும் சுவைபட முன்வைக்கிறது. அதிர்வுகளையும், சிந்தனையையும் ஏற்படுத்தும் சிறுகதை நுால்.

– ஊஞ்சல் பிரபு

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2025 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us