இளைஞனின் காதலை சுற்றி பின்னப்பட்ட நாவல் நுால்.
பூர்வீக சொத்து வழக்கில் போராடி இறக்கிறார் இலவச மருத்துவம் செய்த மருத்துவர். அவரது மகன் சேகர், தாயுடன் சேர்ந்து உழைத்து கடன்களை செலுத்துகிறான்.
தந்தை செய்த சேவையை தொடர உறுதி எடுக்கிறான். கள்ள கடத்தல்காரரின் மகள் ஒருத்தி விபத்தில் சிக்கியபோது காப்பாற்றி மருத்துவமனையில் சேர்க்கிறான்.
அன்புக்கு ஏங்கிய அந்த இளம் பெண், சேகர் மீது காதல் கொள்கிறாள். அவளது தந்தை பணக்காரனை மாப்பிள்ளையாக தேடுகிறார். சேகரின் காதல் மற்றும் லட்சியம் நிறைவேறியதா என முடிச்சுகளுடன் உள்ளது. விறுவிறுப்பான நாவல் நுால்.
– புலவர் சு.மதியழகன்