முகப்பு » ஆன்மிகம் » சுந்தர காண்டம்

சுந்தர காண்டம்

விலைரூ.120

ஆசிரியர் : லட்சுமி ராஜரத்னம்

வெளியீடு: புத்தகப் பூங்கா

பகுதி: ஆன்மிகம்

ISBN எண்: -

Rating

பிடித்தவை
அவதார புருஷன் ராமன் கதையாக மலர்ந்துள்ள நுால். நீதி படும் துன்பம், அநீதி ஆடும் ஆட்டம், பின் அழிவு என உலகுக்கு உணர்த்துகிறது.

சுந்தர காண்டத்திற்கு முதலில் ஆஞ்சநேயர் காண்டம் என பெயர் இருந்ததையும், ஆஞ்சநேயரின் மறுபெயர் சுந்தரம் என்பதால் சுந்தர காண்டம் ஆனதையும் சொல்கிறது. பெண் விரும்பாமல் தீண்ட மாட்டேன் என்ற ராவணன் குணம் வித்தியாசமாக விவரிக்கப்பட்டுள்ளது.

ராமனை தவிர மற்றவரை மனதாலும் நினைக்க மாட்டேன் என்ற சீதையின் கற்பு போற்றப்படுகிறது. சீதையிடம் இன்னும் இரண்டு மாதத்தில் ராமர் மீட்பார் என அனுமன் நம்பிக்கை ஊட்டுவது சிறப்பு. போருக்கு போகும் முன் இந்திரஜித் தந்தை ராவணனை வணங்குவது, தந்தை சொல்லுக்கு கட்டியம் கூறுகிறது. எளிய நடையிலான நுால்.

– சீத்தலைச்சாத்தன்

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2025 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us