‘கவலைக்கு இடம் கொடுக்காதீர். கடவுள் நிச்சயமாக உங்கள் தேவைகளை கவனித்து கொள்வார். உங்கள் மீது நீங்கள் கொண்டிருக்கும் அக்கறையை விட, சுவாமி கொண்டிருக்கும் அக்கறை நுாறு மடங்கு தீவிரமானது...’ இது போன்ற அற்புத உபதேசங்களை போதித்த பகவான் சத்ய சாய்பாபாவின் அருளை உணர்த்தும் சம்பவங்கள் அடங்கியுள்ள புத்தகம்.
நம்பி வரும் பக்தர்களின் முக்காலத்தையும் அறிந்து செயல்படுவது பற்றி கூறப்பட்டு உள்ளது.
ஒரு நோயாளிக்கு நிமோனியா காய்ச்சல் என டாக்டர்கள் முடிவு செய்திருந்த நிலையில், ‘அது மலேரியா தான்’ என சுவாமி கண்டறிந்த அதிசயம் உள்ளிட்ட நிகழ்வுகள் உள்ளன. வரப்பிரசாதமாக அமைந்துள்ள நுால்.
– தி.செல்லப்பா