முகப்பு » ஆன்மிகம் » ஆழ்வார்களும்

ஆழ்வார்களும் ஆசார்யர்களும்

விலைரூ.100

ஆசிரியர் : இரா.சாந்தகுமார்

வெளியீடு: சித்தார்த்தன் பதிப்பகம்

பகுதி: ஆன்மிகம்

ISBN எண்: -

Rating

பிடித்தவை
ஆழ்வார்கள், வைணவ ஆசார்யர்கள் வரலாற்றை சுருக்கமாக தரும் நுால்.

ஒவ்வொரு ஆழ்வாரின் பெயர் காரணம், தோன்றிய திருத்தலம், நாள், நட்சத்திரத்தை எடுத்துக் கூறுகிறது. அவர்களின் திருப்பாடல்களில் சிலவற்றை எளிமையாக விளக்குகிறது. மூன்று பக்கங்களில் ஒவ்வொரு ஆழ்வார் வரலாறும் அமைந்துள்ளது.

வைணவ ஆசார்யர்களாக போற்றப்படும் நாதமுனி, ராமானுஜர், மணவாள மாமுனிகள் உட்பட, 15 பேரின் வரலாறும் சொல்லப்பட்டுள்ளது.

நிறைவாக ராமானுஜர் நுாற்றந்தாதி குறிப்பு அமைந்துள்ளது. அது கூரத்தாழ்வாரின் சீடரான திருவரங்கத்து அமுதனார் படைத்தது என விளக்கப்பட்டுள்ளது. ராமானுஜருடன் ஒன்றாக வாழ்ந்த அனுபவத்தையும் தரும் நுால்.

– முகிலை ராசபாண்டியன்

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2025 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us