விநாயகர் வழிபாட்டின் தத்துவம், அன்றாடம் வழிபடும் முறை, விரத நடைமுறைகளை கூறும் நுால்.
விநாயகர் உருவம் மற்றும் புராணம் தொடர்பான செய்திகள் இடம் பெற்றுள்ளன. பெருமை வாய்ந்த பிள்ளையார் வழிபாடு நீக்கமற நிறைந்துள்ளதை எடுத்துரைக்கிறது. இந்த வழிபாட்டுடன் தொடர்புடைய புராணக்கதைகளும் தரப்பட்டுள்ளன. விநாயகரின் ஆறுபடை வீடு பற்றி தெளிவு ஏற்படுத்துகிறது.
தமிழகத்தில் முக்கிய விநாயகர் கோவில்களின் அருமை, பெருமை, சிறப்புகளை விவரிக்கிறது. அங்கு வழிபடுவதால் ஏற்படும் நன்மைகளை எடுத்துரைக்கிறது. முழு முதல் கடவுள் விநாயகர் ஜாதகத்தையும், அதன் சிறப்பையும் வெளிப்படுத்துகிறது. விநாயகரின் புகழ் பாடும் நுால்.
– ராம்