இலங்கை இன மோதலை அலசும் நுால்.
இலங்கையின் பூர்வீக வரலாறு, போர்ச்சுகீசியர், டச்சுக்காரர், பிரிட்டானியர் ஆட்சி செய்தது, புத்த துறவியர் மத, இன வெறி விதைத்தது கூறப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம் நுாலகம் எரிப்பு நிகழ்வால் ஏற்பட்ட எழுச்சி ஆயுதப் போராட்டத்துக்கு துாண்டியதாக விவரிக்கிறது.
போராட்டத்துக்கு தமிழகத்தில் இருந்த ஆதரவு, மத்திய அரசு அளித்த பயிற்சி, அமைதிப்படை, கருத்து வேறுபாடுகள், நார்வே ஒப்பந்தம் பற்றி விவரிக்கிறது. தனி நாடு கோரிக்கை இல்லை; ஆடம்பர அரசியலுக்கு இலங்கையில் இடமில்லை என்பதையும் விவரிக்கும் நுால்.
– புலவர் சு.மதியழகன்