இந்திய விடுதலை போராட்ட வரலாற்றை சுருக்கமாகக் கூறும் நுால்.
ஐரோப்பியர் வருகை, கிளர்ச்சிகள், இ ந்திய தேசிய காங்கிரஸ் தோற்றம், காந்தியின் வருகை, ஒத்துழையாமை இயக்கம், சட்ட மறுப்பு இயக்கம், வட்ட மேஜை மாநாடுகள், இரண்டாம் உலகப் போர், இந்திய விடுதலையும் பிரிவினையும் என்ற தலைப்புகளில் போராட்டத்தை அறிய தருகிறது.
தமிழகமே விடுதலை போராட்டத்திற்கு வித்திட்டது என சான்றுகளுடன் விளக்கப்பட்டுள்ளது. அகிம்சை, சத்தியாகிரகங்கள் வழியாக காந்திஜி நடத்திய போராட்டத்தை எடுத்துரைக்கிறது. வெள்ளையனே வெளியேறு போராட்டத்துக்கு பின் சுதந்திரம் கிடைத்ததைக் கூறுகிறது. இந்திய விடுதலை போராட்டத்தை இதயம் கனக்க கண்முன் நிறுத்தும் நுால்.
– முனைவர் மா.கி.ரமணன்