திருக்குறள் இன்பத்துப்பால் நிறையழிதல் அதிகாரத்தில் உள்ள குறட்பா கருத்துகளை எளிதில் புரியும் வண்ணம் கதைகளாக உருவாக்கப்பட்டுள்ள தொகுப்பு நுால். பெண்மைக்கே உரிய வெட்கம் என்ற தாழ்ப்பாளை வீழ்த்தி உடைக்கும் கூரியவாள் தான் காமம் என்கிறது.
காமம் ஒருவரை யாமத்திலும் ஆளும் என்கிறது. அதை மறைத்தால் தும்மல் போல வெளிப்படும் என்கிறது. இல்லற வாழ்வில் ஆணுக்கு சோதனை, அழுத்தங்கள் வந்தாலும், அதை நொடியில் தீர்க்கும் வசிய மருந்தாக பெண் இருப்பதாக கூறுகிறது.
பெண்ணை சமாளிக்கவும், வசியப்படுத்தவும் சாதுரியமாக ஆண்கள் கையாளும் தந்திரம் அழகை வர்ணிப்பது தான். ஊடல் இல்லாமல் கூடலின் சுகத்தையும் அனுபவிக்க முடியாது என விளக்குகிறது. இல்லற வாழ்வின் மாண்புரைக்கும் நுால்.
– புலவர் சு.மதியழகன்