இலக்கியங்களில் பிரசார செய்திகள் பற்றி கூறும் நுால்.
சங்க இலக்கியம் துவங்கி பக்தி, விடுதலை இலக்கியம் வரை மேற்கோள் தருகிறது. எழுத்தாளருக்கு அமைப்பு அவசியம் என்கிறது. இலக்கியம் சமூக மாற்றத்தில் முக்கிய பங்காற்றும் என குறிப்பிடுகிறது.
கலை, இலக்கியத்தால் உடனடி மாற்றம் நடக்காவிட்டாலும், நிலைத்திருக்கும் என்கிறது. காலத்துக்கேற்ப மாறுதல் அடையும் என வரையறுக்கிறது. இலக்கிய பிரசாரம் குறித்த ஆய்வு நுால். – புலவர் சு.மதியழகன்