முகப்பு » ஆன்மிகம் » அன்பே, அருளே!

அன்பே, அருளே!

விலைரூ.80

ஆசிரியர் : பரணீதரன்

வெளியீடு: கிழக்கு பதிப்பகம்

பகுதி: ஆன்மிகம்

Rating

பிடித்தவை
பரமாச்சாரியாருக்கோ, அவரது அன்புக்கும் அருளுக்குமோ அறிமுகம் தேவையில்லை. அவ்வண்ணமேதான் பரணீதரனின் மயிலிறகு எழுத்துக்கும். ஆனந்த விகடனில் தொடராக வெளிவந்த பரணீதரனின் இந்நூல், படிக்கும்போது உருவாக்கும் பரவசத்தைச் சொற்களில் விவரிக்க முடியாது. 

பக்தியின் மிகக் கனிந்த நிலையைத் தொட்டு, லயித்து, அதிலேயே நீந்திக் கொண்டிருப்பவர் அவர். பரமாச்சாரியாருடனான அவரது பரவச அனு பவங்கள், வெறும் வார்த்தைகளாக அல்லாமல் மகாபெரியவரின் ஆசியாகவே நம்மை ஆட்கொண்டு விடுகின்றன. 

1956 ம் ஆண்டு முதல் ஆனந்த விகடனில் ஸ்ரீதராக கார்ட்டூன்களிலும், மெரினாவாக நாடகங்களிலும் பரிமளித்தவர் என்றாலும் பரணீதரனாக அவர் ஆற்றிய ஆன்மிகத் தொண்டுகள் அநேகம். இந்நூல், பரமாச்சாரியாரின் பேரருளைச் சுமந்து வருகிறது. அள்ளிப் பருகுங்கள்! ஆனந்தமாக!

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2025 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us