பாரதியும் யுகப் புரட்சியும் தேசிய நோக்கு நிலையிலிருந்து சர்வதேசியத்துக்குச் செல்கிறது. இந்திய இலக்கிய கர்த்தாக்களில் ரஷ்யப் புரட்சியை முதலில் பாடியவன் என்ற சிறப்பு மட்டுமின்றி, அதைக் குறிப்பிடத்தக்க அளவு விளக்கத்துடன் வரவேற்றவன் என்ற சிறப்பும் பாரதிக்கு உண்டு.
அக்டோபர் புரட்சி பற்றியும், பாரதி பற்றியும், இன்றைய நிலையில் தெரியக்கூடிய அனைத்தையும் அழகுற திரட்டித் தந்திருக்கிறார் என்று கலாநிதி கைலாசபதி பாராட்டியிருப்பதே இந்நூலின் சிறப்பாகும்.