விலைரூ.290
புத்தகங்கள்
Rating
துளசி ராமாயணத்தின் பால காண்டம் முதல் உத்தர காண்டம் வரையும் உள்ள நிகழ்ச்சிகளை, மிக எளிய நடையில் நூலாசிரியர் கூறிச் செல்வது படிப்பதற்கு ஆர்வமாக உள்ளது. நூலின் இடையிடையே, நூலாசிரியர் தம் விளக்கங்களை அடைப்புக் குறியிட்டுக் கூறியுள்ளது, அவரின் புலமைக்கு எடுத்துக்காட்டுகள் ஆகும்.
இந்நூலில் கூறப்பட்டுள்ள, "நவதா பக்தி (பக். 406), ராம நாம மகிமைப் படலம் (பக். 413), நூலாசிரியரின் முன்னுரை (பக். 3), பின்னுரை (பக். 632) முதலியன நமக்குப் பல புதிய செய்திகளைத் தருகின்றன.
நூலின் இடையில் தேவையான இடங்களில், இந்தியில், துளசியின் பாடல் அடிகளைக் கொடுத்துள்ளது, படிப்போர்க்கு இன்பம் அளிக்கும் என்று கூறலாம்.நூலாசிரியருக்கும், வெளியீட்டாளருக்கும் பெருமை தரும் வகையில் நூல் அமைந்துள்ளது. அனைவரும் படித்துப் பயன் அடையலாம்.
வாசகர் கருத்து
No Comments Found!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
இதையும் வாசியுங்களேன்!