நல்ல கருத்துகளை எடுத்துரைக்கும் சிறுகதைகளின் தொகுப்பு நுால்.
தலைப்பாக அமைந்த கதையில் ஒரு தாய் எடுக்கும் முடிவு, உள்ளத்தை உருக்கும் வகையில் நுட்பமாக எழுதப்பட்டுள்ளது. ஒரு கதாபாத்திரத்தை முன் வைக்கும், ‘நிச்சயதார்த்தம்’ கதை புதிய செய்தியுடன் அமைந்துள்ளது. பேத்திக்கு கொலுசு வாங்க ஆட்டோ தொழிலாளி எண்ணியபோது பணம் அன்பளிப்பாக கிடைப்பதை, ‘கொலுசு’ சிறுகதை அற்புதமாக கூறுகிறது.
இப்படி திருப்பங்களுடன் அமைந்து, சமுதாயத்திற்கு பல செய்திகளை தெரிவிக்கின்றன; எளிய எடுத்துக்காட்டுகளை முன்வைக்கின்றன. மொழிநடை காட்சிப் பின்புலத்தை விளக்குகிறது. அழகிய அச்சும், அமைப்பும் உடைய நுால்.
– முகிலை ராசபாண்டியன்