முத்துக்குமாரசுவாமி தம்பிரான் சுவாமிகள், நா.மகாலிங்கம், சுகி சிவம் அணிந்துரைகள் நூலின் சிறப்பை, பெருமையை விளக்குகிறது. வேல் மாறல், மாக்ருதா புஷ்பமாலை, அனுஷ்டானத் திருப்புகழ் பயனுள்ள பகுதி. தைப்பூசம், மாசி மகம், பங்குனி மாதச் சிறப்பு பற்றியும் தெரிந்து
கொள்ள முடிகிறது.
சிந்திக்க வைக்கும் வெற்றிலை, வள்ளலாரும் வாழை மரமும் படித்துச் சுவைக்கலாம். அதிலும் `வாழையடி வந்த திருக்கூட்டம் என்ற கருத்துக்கு இந்த நாட்டின் குரு பாரம்பரியத்தை விளக்கும் விதம் அருமை. பயனுள்ள பக்திக் கட்டுரைகள். பக்தியில் திளைக்கலாம். திருப்புகழ் அன்பர்களுக்கு ஒரு பக்திப் பொக்கிஷம்.